அசுர்கர் என்ற பெயரே உங்களுக்கு இதன் அர்த்தத்தை கூறிவிடும். அசுரனின் கோட்டை என்று பொருள் தரும் அசுர்கர் காலாஹண்டியிலுள்ள நர்லாவிற்கு அருகில் உள்ளது. இந்த அரண்மனையில் கி.மு.500 முதல் கி.பி.500 வரை நாகரீக மனிதர்கள் வாழ்ந்து வந்தனர்.
மேலும் இது அரசியல் மற்றும் கலை சார்ந்த மையமாக விளங்கியது. ஒரு பெரிய தொட்டிக்கு அருகில் 200 ஏக்கரில் எஞ்சிய நிலையில் இருக்கும் இந்த கோட்டையை கண்டு வியக்க இங்கே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதுண்டு.
இக்கோட்டைக்கு நான்கு திசையிலும் ஒவ்வொரு வாசல் அமையப்பெற்றுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு தெய்வ உருவம் காட்சியளிக்கும். கிழக்கு வாசலில் கங்கா தேவியும், மேற்கு வாசலில் காலா பஹாத்தையும் காணலாம்.
கிழக்கு வாசலில் வைஷ்ணவி தேவியின் ஓவியமும் வடக்கு வாசலில் புத்தராஜாவையும் வழிபடுவர். இந்த கோட்டையின் முக்கிய கடவுளாக திகழ்பவர் டோக்கரி தேவி என்ற முதிய பெண்மணி.
கோசிங்க டைட்யா என்ற அசுர அரசன் இக்கோட்டையில் வாழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இந்த கோட்டையை சுற்றிப் பார்ப்பவர்கள் கண்டிப்பாக பழங்காலத்துக்கு மனதார இழுத்துச் செல்லப்படுவீர்கள்.