ரபண்டர் என்ற அழகிய நீர்வீழ்ச்சி அடர்த்தியான காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. நகரத்தின் கூட்டத்துக்கு நடுவே ரபண்டர் என்ற இந்த நீர்வீழ்ச்சி தனிமைபடுத்தப்பட்ட இடத்தில் வெறும் நீழ்வீச்சியின் சத்தம் மட்டும் கேட்கும் வகையில் கொட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த இடத்தை அடைய தூசி மிகுந்த சாலைகளை கடந்து செல்ல வேண்டும். சரியான தகவல் தொடர்பு இல்லாத போதிலும் கூட, இயற்கையோடு பல மணி நேரத்தை செலவழிக்க இங்கே சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதுண்டு.
மிகவும் அறியப்பட்ட இந்த சுற்றுலாத் தலத்தில் தீரச் செயல் புரிபவர்கள் நடைபயணம் மேற்கொள்ள தோடாக இருக்கும். இதன் அமைதியும் தனிமையும் அதனுடன் கூடிய இயற்கை அழகும் தான் இந்த இடம் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்க முக்கிய காரணமாகும். குளிர் காலத்தில் குளிர்ந்த தென்றல் வீசும் நேரத்தில் சில்லென்று அருவி நீர் ஓடும் போதே இங்கு சுற்றுலாப் பயணிகள் வர விரும்புவார்கள்.