காளஹஸ்தி கோயிலுக்கு கிழக்குப்பகுதியில் மூன்று மலைகளுக்கு நடுவில் இந்த பரத்வாஜ தீர்த்தம் அமைந்துள்ளது. திரேதா யுகத்தின்போது இந்த மலையில் தவம் புரிந்து வசித்ததாக சொல்லப்படும் பரத்வாஜ முனிவரின் பெயரினால் இந்த தீர்த்தக்குளம் அழைக்கப்படுகிறது.
இந்த பரத்வாஜ தீர்த்தம் அமைந்திருக்கும் பள்ளத்தாக்குப்பகுதியானது பசுமையான மலைச்சூழலின் பின்னணியில் பளிங்கு போன்ற தெளிந்த நீருடன் பள்ளத்தாக்குப்பிரதேசத்தின் வழியே ஓடி வரும் நீரோடையுடன் காட்சியளிக்கிறது. இந்த அற்புதமான சூழலில் புனித நீராட்டுக்கான தீர்த்தக்குளத்தை உருவாக்கியிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
இந்த தீர்த்தக்குளப்பகுதியில் ஒரு பெரிய கம்பீரமான தபோவினாயகர் சிலையொன்றும் வீற்றிருப்பது சூழலின் தெய்வீகப் பொலிவை கூட்டுகிறது. இருப்பினும் சந்தடி நிறைந்த ஒரு மார்க்கெட் பகுதியை கடந்துதான் இந்த தீர்த்தக்குளத்தை சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹாசிவராத்திரி திருநாளின்போது இந்த தீர்த்தக்குளத்தில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தீர்த்தக்குளத்தில் நீராடி தூய்மைப்படுத்திக்கொண்ட பின்னரே சிவனை வழிபடவேண்டும் எனும் ஐதீகமும் நடைமுறையில் உள்ளது.