இந்த மடாலயத்தை விவரிக்க அழகு மற்றும் அமைதி என்கிற இரண்டு வார்த்தைகளே போதுமானது. இங்குள்ள தியான மண்டபம் அமைதியின் வடிவாக திகழ்வதால் அது பயணிகளுக்கு ஒரு தெய்வீக மன நிலையை தருகின்றது.
இந்தப் பழைய மடாலயத்தில் வழக்கமான பராமரிப்பு இல்லாததால் இந்தக் கட்டிடம் அங்கங்கே சிதிவடைந்து காணப்படுகிறது. ஆனால் ஒப்பீட்டளவில் ஸோங்க் ட்ஹொக் பல்ரி ஃபோ பரங்க் கோவில் ஒரு புதிய கட்டிடமாக விளங்குகின்றது.
இங்குள்ள இளம் துறவிகள் இந்த இடத்தை உங்களுக்கு சுற்றி காண்பிக்கின்றனர். மேலும் அவர்களது வழிகள் மற்றும் முறைகள் உங்களுக்கு தெரியப்படுத்த எப்போதும் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.
இங்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகள் அந்தி நேரத்தில் இந்த இடத்திற்கு வருகை புரிந்தால் சூரிய அஸ்தமனத்தின் போது கம்பீரமாக திகழும் மலைகள் மற்றும் கட்டிடங்களை கண்டு களிக்கலாம்.