இக்கோயில், பார்வதி தேவியின் அவதாரமாகக் கருதப்படும் காமாட்சி அம்மனுக்காக எழுப்பப்பட்டதாகும். பெரும்பாலும், இக்கோயில் பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னர்களால், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இங்கு மூலக் கடவுளான காமாட்சி அம்மன், நின்ற கோலத்திலில்லாமல் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இங்கு அம்மன், யோக நிலையில் அமர்ந்த வண்ணம், அமைதியும் கருணையும் கொண்டு அருள் பாலிக்கிறார். ஆச்சரியமாக, இந்துக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் கடவுளான பார்வதி தேவிக்கு, இந்நகரில் கட்டப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும்.
இக்கோயிலில், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கால ஓட்டத்தின் சோதனைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைந்த பல்வேறு பகுதிகள் மற்றும் கட்டமைப்புகள், மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், காஞ்சிபுரத்தின் அனைத்து ஆட்சியாளர்களும், இம்மறுசீரமைப்பு வேலைகள், இக்கோயிலின் அசல் தோற்றத்தை குலைக்காத வண்ணம், அப்படியே நிலை நிறுத்த பெரிதும் பிரயத்தனப்பட்டுள்ளனர். ஆனால் கூர்ந்து கவனிப்போருக்கு, இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் அதன் சுவர்களில் அமைக்கப்பட்ட அசல் வடிவங்கள் புலப்படும்.