மெட்ராஸ் அணுமின் நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கல்பாக்கம் என்ற சிறு நகரத்தில் உள்ளது. இவ்வணுமின் நிலையம் இங்கு அமைக்கப்பட்டதன் முக்கிய காரணமே, தென்னிந்தியாவின் அணு வல்லமையை வலுப்படுத்துவதற்காகும்.
சொல்லப் போனால், இந்த நிலையம் தான், உள்நாட்டு அணு தொழில்நுட்பத்துக்கு முன்னோடியாக உள்ளது. மெட்ராஸ் அணுமின் நிலையம் தான் இந்தியாவின் பூரணமான முன்னோடி அணுமின் நிலையம் ஆகும்.
இந்த அணுமின் நிலையம், அணுமின் உற்பத்தி, எரிபொருள் சுழற்சி முறை, மற்றும் அணுக் கழிவுகள் ஆகியவற்றை சிறப்பாக கையாளும் விதத்தில் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையத்தில், ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர் அல்லது எஃப்ஆர்பிஸ் –க்குத் தேவையான எரிபொருள் ஃபாப்ரிக்கேட்டர்கள், ப்ளூட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகின்றன.
இந்த அணுமின் நிலையம், இந்திய பிரதமராக இருந்த ஸ்ரீமதி இந்திரா காந்தியின் ஆட்சியின் போது அமைக்கப்பட்டு, 1983-ம் ஆண்டு பொது அணுமின் தொகுப்பில் இணைக்கப்பட்டது.
இந்நிலையத்தில் உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பம், அறிவியல் நம் நாட்டில் நிகழ்த்தியுள்ள சாதனையை, ஒரு சாதாரண நபரும் எளிதாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. நீங்கள் இந்தப் பகுதிkkuக்கு சென்றால், இங்கு கட்டாயம் சென்று வாருங்கள்.