இந்து கடவுளான பஜ்ரேஸ்வரியை முதற்கடவுளாகக் கொண்டு 11-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டது. பெரிய பெரிய கற்களால் செதுக்கப்பட்டு சிக்காரா பாணியில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவாயிலில் உள்ள இரண்டு தூண்களில் ஒன்று, இந்த கோவில் கட்டப்பட்ட விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பதற்காக தாங்கி நிற்கிறது.
இந்த கோவிலின் வெளிப்பகுதியின் இந்து கடவுளான துர்கா தேவி சிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு, நான்கு கைகளில் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் போன்ற சிலையும் மற்றொரு இந்துக் கடவுளான விஷ்ணு அவருடைய இருப்பிடமான வைகுண்டத்தில் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல், இங்கிருக்கும் தூண்களில் பல்வேறு இந்து மத ஆண் மற்றும் பெண் கடவுள்களின் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன.