ஜ்வாலாஜி என்று அழைக்கப்படும் இந்த ஜ்வாலாமுகி கோயில் காங்க்ரா பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. நெருப்பு கக்கும் வாயுடன் கூடிய முகத்தை கொண்ட கடவுள் என்ற பொருளில் ‘ஜ்வாலாமுகி’ என்று இந்த கோயிலின் பெண் தெய்வம் அழைக்கப்படுகிறது.
இயற்கை எரிவாயு வெளிவரும் ஒரு தாமிரக்குழாய் ஒன்று இந்த புராதன ஆலயத்தின் விசேஷமாக சொல்லப்படுகிறது. இதேபோன்று ஒன்பது நெருப்பு வெளிவரும் அறை அமைப்புகள் இந்த கோயிலில் காணப்படுகின்றன.
மஹாகாளி, அன்னபூர்ணா, சண்டி, ஹிங்லஜ், பிந்தியபஸ்னி, மஹாலட்சுமி, சரஸ்வதி, அம்பிகை மற்றும் அஞ்சிதேவி என்று சக்தியின் ஒன்பது ரூபங்களின் பெயர்கள் இந்த ஜுவாலை அமைப்புகளுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
தலபுராணக்கதைகளின்படி, தாம்பத்திய சந்தோஷத்தின் கடவுளான ‘சதி’யின் நாக்கு விழுந்த தலத்தில் இந்த கோயில் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சதி தெய்வம் சிறு சிறு நெருப்பு ஜுவாலைகளாக இந்த கோயிலில் வீற்றிருப்பதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது. நீலநிற நெருப்பு ஜுவாலைகள் இந்த கோயிலிலுள்ள புராதன பாறை இடுக்குகள் வழியே தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
இது உண்மைதானா என்று தெரிந்துகொள்ள முகாலய சக்கரவர்த்தி ஒருவர் இந்த கோயிலுக்கு ஒரு முறை விஜயம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் நெருப்பு ஜுவாலைகளை தரிசனம் செய்த பின் தானும் ஒரு பக்தராக மாறிய அசோகர் ஒரு தங்கக்குடையையும் இந்த கோயிலுக்கு பரிசாக அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல், தொடர்ந்து எரியும் நெருப்பை தணிப்பதற்காக ஒரு நீர்ப்பாதை அமைப்பையும் அவர் நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.