மா ஷிவானி கோயில் காங்கேர் நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மா ஷிவானி என்று அழைக்கப்படும் பெண் தெய்வத்துக்காக இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. துர்க்கை மற்றும் காளி ஆகிய இரண்டும் சேர்ந்த சக்தி அவதாரமாக இந்த மா ஷிவானி தேவி வணங்கப்படுகிறது.
இந்த கோயிலில் காணப்படும் தேவியின் சிலையை போன்று கொல்கத்தாவில் உள்ள ஒரு கோயிலில் மட்டுமே இன்னொன்று உள்ளதாகவும், வேறெங்கும் கிடையாது என்றும் கூறப்படுகிறது. வருடாவருடம் நவராத்திரி திருநாள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.