கான்பூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்கா, மிகவும் பெரியதாக உள்ள இயற்கையான வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற உயிரியல் பூங்காக்களில் வனவிலங்குகளை கூண்டில் அடைத்து வைத்து காட்டுவதைப் போலல்லாமல், இந்த பூங்காவில் விலங்குகளை அதன் இயற்கையான வாழிடங்களிலேய காண முடியும். இந்த பூங்காவிற்கான திட்டத்தை உருவாக்கிய சர்.அல்லன் என்ற தாவரவியல் அறிஞரின் பெயராலேய இந்த பூங்கா பெயர் பெற்றுள்ளது.
இந்த உயிரியல் பூங்கா பல்வேறு வகையிலான உயிரினங்களான, அரியவகை கஸ்தூரி மான்கள், ஜாக்குவார் சிறுத்தைபுலிகள், காண்டாமிருகங்கள், புலிகள், சிங்கங்கள், குரங்குகள், லாங்குர் குரங்குகள் மற்றும் சிறுத்தைகளை கொண்டுள்ளது.
மேலும், மீன் காட்சியகம் மற்றும் தாவரவியல் பூங்காக்களை கொண்டுள்ள சில ஏரிகள் மற்றும் அரிய வகை தாவரங்களையும் இந்த உயிரியல் பூங்கா கொண்டுள்ளது. நகரின் மையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலேயே உள்ள இந்த பூங்கா, விலங்குகள் மற்றும் பறவைகள் தவிர, அமைதி மற்றும் பசுமையை கொண்டுள்ள சோலையாகவும் உள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக இருக்கும் இந்த பூங்காவில் உள்ள ஏரியைச் சுற்றிலும் பல்வேறு பழமையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் இன்ப சுற்றுலா மற்றும் ஓய்வு நாடி வர ஏற்ற இடமாக இருக்கும் இந்த பூங்கா, சிறந்த பொழுதுபோக்கு மற்றும் கல்வி மையமாக உள்ளது.