கான்பூரிலுள்ள சிவில் லைன்ஸ் என்ற பகுதியில், கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள கிரீன் பார்க், கிரீன் பார்க் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்னர், இந்த பூங்கா இருக்கும் பகுதியில் குதிரையேற்றம் செய்து வந்த ஆங்கிலேய பெண்மணியான கிரீன் என்ற அம்மையாரின் பெயரால் இந்த பூங்காவிற்கு பெயர் சூட்டப்பட்டது.
உத்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கான விளையாட்டு மைதானமாக இந்த பூங்கா விளங்கி வருகிறது. இந்த பன்முக விளையாட்டு மைதானம், இரவிலும் ஒளிவெள்ளம் பாய்ச்சும் வகையிலும், 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான கேலரி, என்ற பெயரில் மாணவர்கள் மட்டுமே அமர்ந்து பார்க்கும் வரையிலான இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதை இந்த மைதானத்தின் சிறப்பம்சமாக சொல்லலாம்.
வீடியோ திரைகளும், உலகத்திலேயே மிகப்பெரிய கையால் இயக்கக்கூடிய ஸ்கோர் போர்டையும் இந்த மைதானம் கொண்டுள்ளது.
இந்த கிரிக்கெட் மைதானத்தில் தான் பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை, 1959-ம் ஆண்டு இந்திய அணியினர் வீழ்த்தினார்கள். கிரிக்கெட் ரசிகர்களை தங்களுடைய திறமையான ஆட்டத்தால் கட்டிப்போட்டு வைத்திருந்து சுபாஷ் குப்தே, ஜாசுபாய் படேல், மால்கம் மார்ஷல், சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், கபில் தேவ், அனில் கும்ப்ளே மற்றும் முகமது அஸாருதீன் போன்ற இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் இந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடியுள்ளனர்.