புகழ் பெற்ற கான்பூர் முற்றுகை என்ற வரலாற்று சம்பத்தின் போது இறந்தவர்களை நினைவுகூறும் விதமாக 1875-ம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தால் கான்பூர் நினைவு தேவாலயம் கட்டப்பட்டது.
கான்பூர் கன்டோன்மண்டைச் சேர்ந்த ஆல்பர்ட் சந்தில் கான்பூர் கிளப்பிற்கு அருகில் உள்ள இந்த தேவாலாயம் 'ஆல் சோல்ஸ் கதீட்ரல்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
சிவப்பு செங்கற்களையுடைய லோம்பார்டிக் கட்டிடமான இது, கிழக்கு வங்காள இரயில்வேயைச் சேர்ந்த ஆங்கிலேய கட்டடிடக்கலை வல்லுநரான வால்டர் கிரான்வில்லே என்பவரால் கோதிக் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயத்தின் பக்கங்களில் ஆங்கிலேய மக்கள் மற்றும் வீரர்களுக்கான கல்லறைகள் உள்ளன.
இந்த தேவாலயத்தில் இருக்கும் நினைவு தோட்டத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் வழியாக செல்ல முடியும். செதுக்கப்பட்ட திரையையும் மற்றும் மத்தியில் தனது கைகளை குறுக்காக வைத்துக் கொண்டு, உலக அமைதியை குறிப்பிடும் வகையில் ஒரு கோபுரத்தை கொண்டுள்ள ஒரு தேவதையின் சிலையையும் இந்த தோட்டம் கொண்டுள்ள