சுல்தான்பூர் லோதியில் உள்ள குருத்வாரா பேர் சாஹிப் சீக்கியர்களின் புனித தளமாகும். குரு நானக் தேவ் ஜீ இங்கு 14வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். அவரால் நட்டுவைக்கப்பட்ட பேர் மரத்தின் பேரால் இவ்விடம் அழைக்கப்படுகிறது.
சுவற்றிலும், விட்டத்திலும் உள்ள பூ வேலைப்பாடுகள் மிக்க அழகுடன் காட்சியளிக்கின்றன. நவம்பர் மாதத்தில் குருவின் பிறந்தநாளின் போது திருவிழா கொண்டாடப்படுகிறது.