நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த மசூதி அக்காலத்திய ஆட்சியாளர்களின் மத நல்லிணத்திற்கு சான்றாக விளங்குகிறது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் இம்மசூதியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
பிரஞ்சு கட்டிடக்கலைஞர் எம்.மாண்டிக்ஸ் என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த மசூதி மொராக்கோவின் மராகேஷ் மசூதியைப் போலவே தோற்றமளிக்கிறது. இதன் வரலாறு மற்றும் கலாச்சாரப் பெருமை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.