செட்டிநாடு அரண்மனை, இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கலை, கட்டிடக் கலை, மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவை ஆகும்.
டாக்டர். அண்ணாமலைச் செட்டியார், இவ்வரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். அக்காலத்தில் விளங்கிய தொழில் நுட்பத்தைப் பற்றி பல தகவல்களை நமக்கு அளிப்பதால், இது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டிடமாகக் கருதப்படுகிறது.
செட்டிநாடு அரண்மனை, செட்டிநாடு மக்களின் சிறந்த கலாச்சாரப் பெருமைக்கு, மிக உயரிய சான்றாக விளங்குகிறது.
செட்டியார்களின் விருப்பத்திற்குரிய பாரம்பரிய பாணியே இங்கு காணப்படுகிறது. கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து, இவ்வரண்மனை கட்டுமானத்திற்கு மூலப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள் மற்றும் திண்டுகள் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்பட்ட்தால், இவை இக்கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.
அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. எனினும், இது, வெவ்வேறு வகையான கலைகள் மற்றும் பாணிகளைக் கொண்டுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்த்தாக உள்ளது.