தேவகோட்டை, சிவகங்கை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படுகிறது. இவ்வூரின் கண் கவர் அம்சங்கள் பலவற்றால், இவ்வூருக்கு வருடந்தோறும் பல சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
இங்குள்ள ‘வீடு’ என்றழைக்கப்படும் செட்டிநாடு மாளிகை ஒன்று, சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் அம்சமாகத் திகழ்கிறது. இந்த பிரபலமான பாரம்பரிய இல்லம், அதன் அழகிய கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றால், வருடந்தோறும், பல சுற்றுலாப் பயணிகளின் வருகைகளையும், தங்கியிருப்பையும் கொண்டுள்ளது.
இம்மாளிகை, ஸ்பானிஷ் ஓடுகளால் வேயப்பட்ட கூரை, இத்தாலி சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட தரைகள், மற்றும் சுத்தமான தேக்கு மரத்தாலான தூண்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகு மிளிர காட்சி தருகிறது.
இவ்வரண்மனையில் தங்குவதே ஒரு மகானுபவமாக உள்ளது. இது ஒரு கட்டிடக்கலை அற்புதமாக மட்டுமின்றி, இங்கு வேலை செய்வோரும் மிகுந்த வரவேற்புடனும், அக்கறையுடனும் காணப்படுகின்றனர்.
இவர்கள், ஒவ்வொரு விருந்தினரின் தேவைகளையும் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றி, அவர்களின் தங்கியிருப்பு இனிமையானதாக இருக்க, பெரிதும் மெனக்கிடுகின்றனர்.
பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இங்கு வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட தங்கியிருந்து, இந்த பகுதியிலுள்ள இடங்கள் வழங்கும் உயர்ந்த கலாச்சார சுகானுபவத்தை மிகவும் ரசிக்கின்றனர்.