காரைக்குடியிலுள்ள, மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில், நாட்டின் மிகப் பெரிய கோயில்களுள் ஒன்றாகும். முதன் முதலாக, இக்கோயிலை குலசேகர பாண்டியன் கட்டியுள்ளார்; ஆனால், அக்கோயில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.
விஸ்வநாத நாயக்கர், 16-ம் நூற்றாண்டில், மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளார். பின்னர், திருமலை நாயக்கர் இப்பணிகளை நிறைவு செய்துள்ளார்.
இன்றைய தலைமுறை, இதன் அழகையும், கம்பீரத் தோற்றத்தையும் பார்த்து அதிசயிக்கின்றனர். இதன் கட்டுமானம் மற்றும் பொறியியல் கலைகள், அதன் காலத்தைக் கடந்த முற்போக்குத் தன்மை கொண்டனவாக விளங்கின.
இக்கோயில், மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில், 12 கோபுரங்களுடன் காட்சியளிக்கின்றது. இக்கோபுரங்களுள் நான்காவது கோபுரம், கோயிலின் வெளிப்பிரகாரத்தில், அதற்கு பாதுகாப்பளிப்பது போல் அமைந்துள்ளது.
இங்குள்ள தூண்கள் தட்டினால் சத்தமெழுப்பக் கூடியன. ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு வித சங்கீதத்தை எழுப்பும். மிகவும் பிரபலமான பொற்றாமரைக் குளம், கோயிலின் இடப்பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், லிங்க வடிவில் உள்ள சுந்தரேஸ்வரருக்காக எழுப்பப்பட்டதாகும்.