பதூம் அல்லது பதம் கார்கிலில் இருந்து 240 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள, ஷான்ஸ்கர் தாலுகாவின் மிகப்பெரிய நகரமாகும். பண்டைய காலங்களில் இந்த நகரம், ஷான்ஸ்கர் பேரரசின் தலைநகரமாக செயல்பட்டு வந்தது.
உள்ளூர் ராஜாவின் சேற்று அரண்மனை, ஒரு சிறிய மடம், மற்றும் ஆற்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாறை சிற்பங்கள் ஆகியன இங்கே உள்ள முக்கிய இடங்கள்.
ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள, பிபிடிங் (Pibiting) எனப்படும் பண்டைய கிராமத்தில், அமைந்துள்ள மடம் பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது.