சங்லா ஷான்ஸ்கர் தாலுகாவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது பதூமில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. குளிர்காலத்தில், பதூமில் இருந்து சங்லா வழியாக ஓடும் ஷான்ஸ்கர் நதி முற்றிலும் உறைந்து செயலிழந்து காணப்படும்.
உறைபனி அடர்த்தி மிகுந்து காணப்படுவதால், மக்கள் இதன் மீது நடந்து செல்ல முடியும். இப்பனி தாள் சாடார்(chaadar) என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. பனி மூடிய ஆற்றின் அருகே அமைந்துள்ள சிறிய குகைகளில், பயணிகள் இரவில் தங்கி செல்கின்றனர். கோடை காலங்களில் மலையேறுபவர்களுக்கு, சங்லா ஒரு அடிப்படை முகாமாக பயன்படுகிறது.