கர்ஜத் ஸ்தலத்தில் உள்ள இந்த கொண்டேஷ்வர் கோயில் சிவனுக்கான ஒரு புராதனமான கோயிலாகும். இந்த திருக்கோயிலின் கர்ப்பக்கிருகத்தைச் சுற்றி பல சிறிய சன்னதிகளும் அமைந்துள்ளன.
இந்தக் கோயில் அக்கால ஹேமந்த்பதி பாணியில் கட்டப்பட்டிருப்பது முக்கியமான அம்சமாகும்.மஹாசிவராத்திரி திருநாளின் போது இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மழைக்காலத்தில் இக்கோயிலுக்கு விஜயம் செய்வது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அக்காலத்தில் கோயிலை சுற்றிலும் உள்ள பாறைப்பகுதி வழுக்கும் அபாயத்துடன் காணப்படுகிறது.