மீரான் சாஹிப் என்று அழைக்கப்பட்ட ஒரு ஞானியின் கல்லறையே இது. இவரது முழுப்பெயர் அஸ்தான் சயத் மஹ்மூத் என்பதாகும். பல மனிதாபிமான தொண்டுகள், கொடைகள் போன்றவற்றுக்காக சாதிமதங்கள் கடந்து அனைவர் மத்தியிலும் இவர் பிரசித்தமாக மதிக்கப்பட்டுள்ளார்.
சொல்லப்படும் கதைகளின்படி, ஒரு பிராம்மண பெண்ணை கடத்திசென்ற ஒரு ராஜா அவளை விடுவிக்க மறுத்துள்ளார். இந்த மீரான் சாஹிப் 500 பேர் கொண்ட ஒரு படையுடன் சென்று அந்த ராஜாவுடன் சண்டையிட்டுள்ளார்.
தற்போதைய கர்ணால் ரயில் நிலையத்தின் அருகில் இந்த சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த போரின் முடிவில் அந்தப்பெண் மீட்கப்பட்டுவிட்டாலும், ஏறக்குறைய அந்த வீரர்கள் யாவருமே மடிந்துபோயினர். மேலும், மீரான் சாஹிப் தனது ஒரு கையையும் இந்த போரில் இழந்தார்.
இந்த கதையின் ஒரு சுவாரசிய அம்சம் அவரது வெட்டப்பட்ட கை பாடியாலா மாவட்டத்திலுள்ள புதானா எனும் இடத்தில் புதைக்கப்பட்டது என்பதுதான்.
286வது ஹிஜிரி ஆண்டில் அவர் இறந்தபோது அவரது தலை கர்ணால் பகுதியிலும், உடல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்திலிருக்கும் ஜிஞ்ஜனா எனும் இடத்திலும் புதைக்கப்பட்டன.
இவரது சமாதி கர்ணால் நகரத்தின் தெற்கே இருந்த கல்லறை வளாகத்தில் அமைக்கப்பட்டது. இங்கு கர்ணால் நகரத்தைச்சேர்ந்த மண்டல் நவாப் வம்சத்தாரின் கல்லறைகளும் காணப்படுகின்றன.