காட்டுயிர் ஆர்வலர்களுக்கு பிடித்தமான இது கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்ட த்தில் கார்வாரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டரில் இருந்து 925 மீட்டர் வரை உயரம் கொண்ட இப்பகுதி 340 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது.
முக்கியமான சுற்றுச்சூழல் கேந்திரமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த அன்ஷி தேசிய வனவிலங்கு பூங்கா தன்டெலி வனவிலங்கு சரணாலயத்தின் ஒருபகுதி பிரிக்கப்பட்டு ஒரு காட்டுயிர் பூங்காவை உருவாக்கியபோது பிறந்தது.
2007ம் ஆண்டு ஜனவரி மாத த்தில் இந்த பூங்காவுக்கு ‘ப்ராஜக்ட் டைகர்’ (புலிகள் பாதுகாப்பு ) திட்டத்துக்கான சரணாலயமாகவும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த பூங்காவை விஜயம் செய்வதற்கு ஏற்ற காலம் நவம்பர் மற்றும் ஜூன் மாதங்கள் ஆகும். விலங்குகள், ஊர்வன, பறவைகள், அரிய வகை தாவரங்கள் போன்றவை இந்த பூங்காவில் நிறைந்துள்ளன.