பயணத் திட்ட த்தை பொறுத்து சுற்றுலாப்பயணிகள் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த தர்க்காவுக்கு சென்று வரலாம். கீர்த்தி பெற்ற பாக்தாத் ஞானி பீர் ஷான் ஷம்சுதீன் கரோபட்’க்காக உருவாக்கப்பட்ட இந்த தர்க்கா இந்தியாவின் கடற்கரைப்பிரதேச கோயில்களில் அழகானதாக கருதப்படுகிறது.
ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். சதாசிவ்காட் மலைக்கோட்டையிலுள்ள துர்க்கா கோயிலுக்கு நேர் எதிரில் இந்த தர்க்கா அமைந்துள்ளது. 1510 போர்த்துகீசிய ஆட்சியின்போது இந்த தர்க்கா பிர் கோட்டை என்று பெயரிடப்பட்டு போர்த்துகீசியர்கள் இதை ‘ஃபோர்ட் டெ பிடோ (பிரோ)’ என்று அவர்கள் மொழியில் அழைத்தனர்.