கார்வார் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் காளி ஆற்றங்கரையில் இந்த ஜய் சந்தோஷி மாதா கோயில் அமைந்துள்ளது. பெயருக்கேற்றபடி இந்த கோயிலின் பிரதான தெய்வம் சந்தோஷி மாதாவாகும்.
கணபதிக்கடவுளின் மகளாக இந்த சந்தோஷி மாதா கருதப்படுகிறது. புராணக்கதைகளின்படி துர்க்கா தெய்வத்தின் மறு அவதாரமான இந்த சந்தோஷி மாதா சக்தியின் அடையாளமாகவும் நீதிக்கான தெய்வமாகவும் கருதப்படுகிறது.வருடம் முழுவதும் இங்கு கொண்டாடப்படும் பல விழாக்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.எல்லா செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் இந்த கோயிலில் தீபோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் இந்த ஸ்தலம் முழுதும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சிரவண மாதத்தில் இங்கு உகாதி லக்ஷ தீபோத்சவம் கொண்டாடப்படுகிறது.
மங்களா கார்யா, நவராத்திரி பல்லக்கி மற்றும் விருத் உத்யபாண போன்றவை இங்கு கொண்டாடப்படும் இதர விழாக்களாகும்.சுற்றுலாப்பயணிகள் நகரத்திலிருந்து பஸ், டாக்ஸி, ஆட்டோ போன்ற பொதுப்பொக்குவரத்து வசதிகள் மூலம் அடையலாம். கார்வார் வழியாக செல்லும் பயணிகள் அனைவருமே இந்த கோயில் வைபவங்களில் கலந்து கொண்டு ஒரு மகிழ்ச்சியான ஆன்மீக அனுபவத்தினை பெறலாம்.