நேரமும் மனமும் இருந்தால் கார்வாருக்கு அருகில் உள்ள ஒரு தீவில் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த நத்தைப்பாறை கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படும் ஒரு புராதனச்சின்னத்தையும் பார்த்துவரலாம்.இது தேவத் குட்டா (நத்தைப்பாறை) தீவில் 1860 ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் உள்ள மாடத்திலிருந்து பயணிகள் விளக்கு அறையின் வாசலை பார்க்க முடிகிறது.
இந்த விளக்கு வழக்கமான சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டிருக்காமல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இது சரியாய் தெரியவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கலங்கரை விளக்கத்தை பார்ப்பதற்கு முறையான முன் அனுமதி பெற வேண்டும் என்பது பயணிகள் நினைவில் கொள்ளவேண்டிய விஷயமாகும். முக்கியமான தேசப்பாதுக்காப்புத்திட்டமான INS ‘கடம்பா’ வின் திட்டத்தளம் இங்கு அருகில் அமைந்துள்ளதே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.