ஆங்கிலேயரால் 1923ம் ஆண்டில் இந்திய மற்றும் காதிக் கட்டிடக்கலை அம்சங்களை கலந்து இந்த பாப்டிஸ்ட் சர்ச் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. இயற்கை சூழலின் மத்தியில் வீற்றுள்ள இந்த ஆன்மிக ஸ்தலம் அதிகமான பார்வையாளர்கள் விஜயம் செய்யும் இடமாகவும் திகழ்கிறது.
தேவாலய வளாகம் முழுதும் அமைதியும் அழகும் தவழ்வதால் பயணிகள் இங்கு ஈர்க்கப்படுகின்றனர். நகரத்தின் மையத்திலேயே அமைந்துள்ள இந்த சர்ச்சுக்கு பயணிகள் டாக்சிகள் அல்லது கார்கள் மூலம் சுலபமாக சென்றடையலாம்.