கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் சிவாலிக் மலைகளில் இந்த தக்ஷாய் அமைந்துள்ளது. இது இந்தியாவிலுள்ள பழமையான பிரிட்டிஷ் கண்டொன்மெண்ட் பகுதிகளில் ஒன்றாகும்.
1876ம் ஆண்டிலேயே துவக்கப்பட்ட பழமையான பள்ளிகள் இந்த தக்ஷாய் மலைப்பகுதியில் காணப்படுகின்றன. இங்கு ஒரு மலையின் உச்சியில் பெரிய கால்பந்து மைதானமும் உள்ளது. டுராண்ட் கால்பந்து டூர்ணமெண்ட் போட்டிகள் ஆரம்ப காலத்தில் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டிருக்கின்றன.
பல போர்கள் நடைபெற்ற ஒரு வரலாற்றுத்தலமாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது. 1846ம் ஆண்டில் ஒரு பெரிய சிறைச்சாலையுடன் கூடிய ஒரு கண்டோன்மெண்ட் வளாகத்தை இந்த இடத்தில் கட்டியுள்ளனர். இங்கிருந்த சிறைக்கைதிகளின் நெற்றியில் அடையாளத்துக்காக நிரந்தரமான ‘பச்சைக்குத்து’ பொறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆங்கிலேயர்களின் உரிமைக்குள் வருவதற்கு முன்னர் இப்பகுதி பாடியாலா மன்னரின் ஆளுகைக்குள் இருந்துள்ளது. இங்குள்ள ஒரு ரோமன் கத்தோலிக் சர்ச் இப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. கண்டோன்மெண்ட் பகுதியில் வசித்த ஆங்கிலேயே வீரர்களுக்கான கல்லறைத்தோட்டமும் இந்த சர்ச் வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ளது.