இந்திய ராணுவக் கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த கசௌலி கிளப் 1880 ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற சமூகச்சங்கங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த கிளப்பில் அங்கத்தினராக தகுதி பெற 15 வருடங்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவ அதிகாரி அந்தஸ்து கொண்ட கிளப் செக்ரட்டரியால் இந்த கசௌலி கிளப் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கிளப்பின் புகழ் பெற்ற மர அலங்கார அமைப்புகள் 2001ம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிதைந்துபோய்விட்டது ஒரு துரதிர்ஷமான நிகழ்வாகும்.
இரண்டு டென்னிஸ் அரங்குகள், ஒரு ஸ்குவாஷ் அரங்கு, சீட்டு விளையாட்டு அறைகள், பில்லியர்ட்ஸ் அறை மற்றும் தோட்டம் ஆகியவை இந்த கிளப் வளாகத்தில் இடம் பெற்றுள்ளது.
இங்கு தங்குமிட வசதிகளும் உள்ளன. டக்ஷாய் மற்றும் சுபாத்து கண்டோன்மெண்டுகளோடு இந்த கசௌலி கிளப் இணைந்துள்ளது. இந்த கிளப் துவங்கப்பட்ட நாள் முதல் கசௌலி நைட் எனப்படும் ஒரு விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.