ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும். இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் கீர் என்ற இனிப்பு பதார்த்தையும் பாலையும் கொண்டு இக்கோவில் இப்பெயரை பெற்றது.
இந்து பெண் கடவுளான ராஞ்னய தேவிக்கென 1912 ஆம் ஆண்டு அரசர் பிராதாப் சிங் என்பவரால் கட்டப்பட்டு, பின்னர் ஹரி சிங் என்ற அரசரால் புதிப்பிக்கப்பட்டது.
இங்கு காணப்படும் அருங்கோண வடிவிலான சுருளானது தேவியை குறிக்கும். புராணக் கதைகளில் இத்தலத்தில் ஸ்ரீ ராமர் வழிபாடு செய்த தலமாகவும், ஸ்ரீ ராமரின் வனவாச காலம் முடிந்து அவர் நாடு திரும்பும் போது, தேவியின் உருவச் சிலையை ஷாதிபொராவிற்கு மாற்றச் சொல்லி ஹனுமனுக்கு ஸ்ரீ ராமர் உத்தரவிட்டார். இப்பொழுது அச்சிலை ஷாதிபொராவில் தான் உள்ளது.
இங்கே பக்தர்கள் காணிக்கை அளிக்கும் வெள்ளை நிற கீர் இனிப்பு, நிறம் மாறினால் ஏதேனும் எதிர்பாராத அசாம்பாவிதம் நிகழப் போகின்றது என்று நம்பப்படுகிறது. மே மாதங்களில் பெளர்ணமியிலிருந்து எட்டாம் நாள் இங்கு பெரும் அளவில் பக்தர்களை காணலாம்.
இந்த புனித நாளில் தேவி நீரின் நிறத்தை மாற்றுவதாக ஒரு நம்பிக்கை. ஜெஷ்ட அஷ்டமி மற்றும் சுக்ல பக்ஷ அஷ்டமி போன்ற தினங்கள் இங்கு விசேஷமாக கொண்டாடப் படுகின்றன.