கத்துவா மாவட்டத்தில் இருக்கும் பஞ்சால் பகுதியில் இருந்து ஜோதியா தி மாதா கோவில் 4கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 7000அடி உயரத்தில் இயற்கையின் மடியில் அமைந்திருக்கிறது இக்கோவில்.
நவராத்திரி சமயங்களில் இக்கோவில் ஏராளமான பக்தர் கூட்டம் குவிகிறது. அமைதியான, இயற்கை சூழலை விரும்பும் மனிதர்களுக்கு இக்கோவில் ஒரு வரப்பிரசாதம்.