இந்துக்களின் அழிக்கும் கடவுளான சிவனை மூலக்கடவுளாகக் கொண்ட மஹாபில்வகேஷ்வர் கோவில் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
முதலில் ஹரிஹரா கோவில் என வழங்கப்பட்டு பின் இங்கு அதிகமாக காணப்படும் பேயல் மரங்களின் பெயரால் மஹாபில்வகேஸ்வரர் கோவில் என வழங்கப்பட்டது. சிவனுக்கு பேயல் மர இலைகள் பிடிக்கும் என மக்கள் நம்புவதால் சிவனுக்கு பேயல் இலைகளை படைத்து வணங்குகிறார்கள்.
இக்கோவிலின் கருவறை 60அடி உயரத்தில் சதுர பீடத்தின் மேல் அமைந்திருக்கிறது. விநாயகர், பிரம்மன், வைரவர், விஷ்ணு ஆகிய இந்துக்கடவுள்களின் சிலைகள் ஐந்து தலை கொண்ட சிவன் சிலையுடன் அமையப்பற்றிருக்கின்றது.
வனவாசத்தின் போது இவ்விடத்தை பாண்டவர்கள் தங்கள் வழிபாட்டுத் தளமாக உபயோகப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இங்கே சிவனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.