பில்லவார் தாலுகாவில் இருக்கும் முக்கியமான நகரமான மன்கோட், ராம்கோட் என்றும் அழைக்கப்படுகிறது. 1272-1314 முதல் ஜம்முவை ஆண்ட நரசிங்கதேவின் வாரிசான ராஜா மனக் தேவ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நகரம் பசந்தர் ஓடையின் கரையில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது.
பிறகு 1822ல் இருந்து 1843 வரை இப்பகுதியை ஆண்ட சுசேத் சிங் என்ற ராஜாவால் இப்பகுதி ராம்கோட் என பெயரிடப்பட்டது.