கத்துவா மாவட்டத்தில் இருக்கும் சுக்ரலா மாதா கோவில் சுக்ரலா தேவிக்காக கட்டப்பட்ட பண்டையகால கோவிலாகும். ஒதுக்கிவைக்கப்பட்ட சம்பா இளவரசரான மதோ சிங்கால் கட்டப்பட்ட இந்த வழிபாட்டுத்தளம் 3500அடி உயரத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.
சாரதா தேவியின் மற்றொரு வடிவமான மால் தேவியின் கோவிலாகவும் இக்கோவில் உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது.
மேலும் இங்குள்ள மக்கள், அம்மன் ஒரு பெரிய கல்லின் மீது அமர்ந்து தன்னைத் தானே வரைந்து கொண்டதாகவும் நம்புகிறார்கள். செம்பில் உருவாக்கப்பட்டு, வெள்ளி தலை பொருத்திய சிங்கம் போன்ற உருவத்தின் மீது அமர்ந்திருப்பது போல அமைந்திருக்கிறது அம்மனின் சிலை. மகிஷாசுரனின் மேல் நிற்பது போல் அமைந்திருக்கும், துர்கை அம்மனின் மற்றொரு அவதாரமான மகிஷாசுரமர்த்தினியின் சிலையையும் இங்கே காணலாம்.