பைஜ்னாத் நகரில் அமைந்துள்ள பைஜ்னாத் கோயில் இந்து மத நம்பிக்கைகளில் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. இது கௌஸனியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில், இந்துக்கள் மத்தியில் பெரும் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது.
இந்து மத புராணங்களின் படி, சிவனும் பார்வதி தேவியும், கோமதி மற்றும் காருர் ஆறுகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் திருமணம் செய்து கொண்டதாக கருதப்படுகிறது.
பைஜ்னாத் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளின் போது `கத்யுரி' வம்சத்தின் தலைநகராக விள்ங்கியது. அப்பொழுது, இந்நகரம், `கார்த்திக்யாபுரா' என அழைக்கப்பட்டுள்ளது.