6 வது ஜைன தீர்த்தங்கரரான பத்ம பிரபா என்பவரை கௌரவிக்கும் விதமாக 1834ம் ஆண்டில் இந்த திகம்பர் ஜெயின் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. நாட்டிலுள்ள ஜைன இனத்தார் யாத்ரீக பயணம் மேற்கொள்ளும் முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
மஹாவீரர் காலத்திலிருந்தே ஸ்வேதாம்பரர் கோயில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தீர்த்தஸ்தானம் மஹாவீரர் பல முறை விஜயம் செய்த புண்ணியத்தலமாக கருதப்படுகிறது.
கம்பீரமான இந்த திகம்பர் ஜெயின் கோயில் நுணுக்கமான கலையம்சங்கள் நிரம்பிய கோயிலாக காட்சியளிக்கிறது. இங்கு 30 செ.மீ உயரமுள்ள பத்மபிரமா சிலை பத்மாசன கோலத்தில் காணப்படுகிறது.
சாந்தம் தவழும் தோற்றத்துடன் ஒற்றைக்கல்லில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. தீர்த்தங்கரைன் பாதச்சுவடும் இந்த கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
மஹாராணி ம்ருஹவதி என்பவரால் கட்டப்பட்ட 20 வாசல்களைக்கொண்ட கோட்டை ஒன்றின் இடிபாடுகளை இந்த கோயிலிலிருந்து நன்றாக பார்க்கலாம்.
கந்த்வா குஷால் எனும் கிராமத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் யமுனை நதியின் கரையில் இந்த கோயில் அமைந்துள்ளது.