பழைய கௌசாம்பி நகரத்தின் வரலாற்று ராமாயண மஹாபாரத காலத்திற்கும் முன்னாலிருந்தே துவங்குகிறது. மஹாபாரத காலத்தில் 16 மண்டலங்களில் ஒன்றான வத்ச மஹாஜனபடா எனும் மண்டலத்தில் தலைநகரமாக இது திகழ்ந்திருக்கிறது.
இந்த இருபெரும் இதிகாசங்களில் இந்த நகரம் சேடி வம்ச இளவரசரான குசா அல்லது குசாம்பா என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.
புத்தர்காலத்தில் மிக செழிப்பான ஒரு நகரமாக இந்த பழைய கௌசாம்பி விளங்கியிருக்கிறது. நாட்டின் நான்கு திசைகளிலிருந்து யாத்ரீகர்கள் மற்றும் வணிகர்கள் தங்கிச்செல்லும் கேந்திரமாகவும் இது அந்நாளின் புகழ் பெற்று அறியப்பட்டிருக்கிறது.
இந்த நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் புராதன நாணயங்கள், சிலைகள், சிற்பங்கள், ஸ்தூபிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இவை அக்காலத்திய உன்னதங்களின் ஆவணங்களாக கிடைத்திருக்கின்றன. ஒரு அசோகத்தூண், ஜைன கோயில், ஒரு கற்கோட்டை மற்றும் கோஷித் ராம் மடாலயம் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
ஞானோதயம் பெற்ற 6 அல்லது 7 ஆண்டுகளுக்குப்பின் புத்தர் இந்த ஸ்தலத்தில் வாழ்ந்து ஆன்மீக உரைகளை நிகழ்த்தியுள்ளார். எனவே புத்த மதத்தினர் இந்த கௌசாம்பி நகரத்தை ஒரு புனித யாத்ரீக நகரமாக கருதுகின்றனர்.