கோலாகாட் மாவட்டடத்தின் டிபோராவில் கல்யாணி மந்திர் அமைந்துள்ளது. இப்பகுதி ஹலேம் வருவாய் வட்டத்தின் கீழ் வருகிறது. இந்த கோவில் கல்யாணி என்ற பெண் தெய்வத்தின் கோவிலாக உள்ளது.
துர்கா தேவியின் வடிவமாகவும், சக்தி என்ற பெண் தெய்வத்தின் அவதாரமாகவும் இருக்கும் இந்த கடவுளுக்கான இந்த சிறிய, புனிதமான கோவிலை அரிமாட்டா என்ற அரசர் கட்டியதாக நம்பப்படுகிறது.
இந்த கோவிலின் கட்டிடக்கலையைப் பற்றி குறிப்பிட்டு சொல்லும் விஷயங்கள் எதுவுமில்லை. இது விவரிக்க இயலாத அழகுடையதாகவும் மற்றும் எளிமையானதாகவும் உள்ளது.
இது அஸ்ஸாமிய நாம்காரின் அமைப்பையொத்ததாக உள்ளது. இந்த கோவிலிற்கு மத நம்பிக்கையுள்ள பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.
காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகில் இருப்பதால் கல்யாணி மந்திர் கோவிலுக்கு சுற்றுலாப்பயணிகள் வர விரும்புகிறார்கள். நீங்கள் காஸிரங்காவில் தங்கியிருந்து சுற்றுலா செல்ல திட்டமிட்டால், கல்யாணி மந்திர் உட்பட கோலாகாட் மாவட்டத்தின் வேறு சில இடங்களுக்கும் ஒரே நாளில் சென்று வர திட்டமிடுங்கள். ஏனெனில், அருகருகே வேறு சில சுற்றுலா தலங்களும் இந்த மாவட்டத்தில் உள்ளன.