ஸ்ரீமந்தா சங்கர்தேவாவின் ஆஸ்தான சீடரான ஸ்ரீ ஸ்ரீ மதாப்தேவ் என்பவரின் பிறப்பிடம் தான் மாதாப்தேவ் தான். போர்பாலி கிராமத்திற்கு அருகில் இருக்கும் இவ்விடம் லெடெகு புகுரி என்றும் அழைக்கப்படுகிறது. லெடெகு புகுரி அஸ்ஸாமின் லட்சுமிபூர் மாவட்டத்தின் கீழ் வரும் இடமாகும்.
1489-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீ ஸ்ரீ மாதாப்தேவ், அஸ்ஸாமில் வைணவ மதத்தைப் பரப்பியவர்களில் முக்கியமானராவார். ஸ்ரீமந்தா சங்கர்தேவாவின் நம்பிக்கைக்குரிய சீடர்களில் ஒருவராக இருந்ததோடல்லாமல், கலை நுணுக்க அறிவிற்காகவும் இவர் அறியப்படுகிறார்.
ஸ்ரீமந்தா சங்கதர்தேவாவின் மறைவிற்குப் பின்னர், ஸ்ரீ ஸ்ரீ மாதாப்தேவ்-ஐ அஸ்ஸாமியர்கள் தங்களுடைய மதகுருவாக பின்பற்றினார்கள். அஸ்ஸாமில் இன்றளவிலும் நாம்கார்களில் பாடப்பட்டு வரும் 'போர்கீட்ஸ்' என்ற மத சுலோகங்களை வழங்கியவர் ஸ்ரீ ஸ்ரீ மாதாப்தேவ் தான்.
மாதாப்தேவ் தானில் பெரும் எண்ணிக்கையிலான புனித நூல்கள், கலாச்சார பாரம்பரியங்கள் மற்றும் பழமையான ஓலைச்சுவடிகள் ஆகியவை உள்ளன. இந்த அரிய தொல்பொருட்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.