பெடுவா-கோசானி தான் கோவில் இந்த பகுதியிலேயே பழமையான கோவிலாகும். உள்ளூரில் வழிபடப்பட்டு வரும் பெண் தெய்வமான காளியும், இந்த கோவிலும் இப்பகுதியில் வழிபடப்பட்டு வரும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். உள்ளூர்வாசிகள் காளி மாதாவை கேசய்கைத்தி என்ற பெயரில் வணங்கி வருகிறார்கள்.
லக்ஷிம்பூர் பகுதியை பிரிட்டிஷார் ஆக்கிரமித்த போது, அவர்கள் இந்த கோவிலை கண்டுபிடித்தன் பின்னணியில் ஒரு ஆர்வமூட்டக் கூடிய கதை உள்ளது. பிரிட்டிஷாருக்கு லக்ஷிம்பூர் பகுதியை கட்டுப்படுத்துவதற்கு சற்று காலம் பிடித்தது.
அவர்கள் தங்களுடைய ஆட்சியை இந்த பகுதியில் நிலைநிறுத்தும் வேளையில் இந்த கோவிலை கண்டுபிடித்தார்கள். இந்த பெடுவா-கோசானி தான் கோவிலுக்கு அருணாச்சல பிரதேசத்தின் டபாலா இன மக்கள் புனிதப் பயணமாக வருவார்கள் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவி வருகிறது.
இன்றளவிலும் புகழ் பெற்று விளங்கும் பெடுவா-கோசானி தான் கோவிலில் காளி மாதா வழிபடப்பட்டு வருகிறார். ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலில் உள்ளூர்வாசிகள் துர்கா பூஜா விழாவை கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த கோவில் காஸிரங்கா தேசிய பூங்காவிலிருந்து அதிக தொலைவிலும் இல்லை.