காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அருகிலுள்ள நாராயண்பூரில் சில ஆர்வமூட்டக் கூடிய சுற்றுலா தலங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்றுதான் சாவ்குச்சி கிராமத்தில் இருக்கும் ராதா புகுரியாகும். இந்த குளம் தற்போது அஸ்ஸாம் அரசு மீன்வள துறையினரால் மீன் வளர்ப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
ராதா புகுரி குளம், சுமாராக கி.பி.1400 முதல் கி.பி.1500-க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. லட்சுமிநாராயண் என்ற அரசரால் கட்டப்பட்ட இந்த குளத்திற்கு அவருடைய மனைவி 'ராதா'வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வேறு சில வரலாற்று ஆய்வாளர்கள், இந்த குளத்தைக் கட்டியவர் சர்பேஸ்வரி என்ற அரசி என்றும் மாற்றுக் கருத்தினை கொண்டிருக்கிறார்கள்.
இந்த குளத்தின் கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டதை உணர்த்தும் வகையில், அரை என்று பொருள் தரும் ஆதா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஆதா புகுரி என்றும் இது அழைக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர், இந்த குளத்திற்கு ராதா புகுரி என்று பெயர் மாற்றப்பட்டது.
காஸிரங்கா தேசிய பூங்காவிலிருந்து நாராயண்பூர் 34 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ராதா புகுரி குளத்திற்கு வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் 1 மணி நேரத்தில் இந்த நாராயண்பூரை அடைந்திட முடியும்.