சிவபெருமானும் பார்வதியும் இங்கு நாகநாத ஸ்வாமியாகவும் சௌந்தரநாயகியாகவும் வழிபடப்பட்டாலும், இக்கோவில் கேதுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். கேது தேவனே இக்கோவிலின் முக்கிய கடவுள் என்பதால் பாதி மனிதனும் பாதி பாம்புமாக சித்தரிக்கப்பட்ட கேதுவின் சிலை இங்கு வைக்கப்பட்டு இருக்கின்றது. த
ங்கள் ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு ஜோதிட பரிகாரம் செய்ய இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.
சிவபெருமானுக்கு பக்தர்களாக இருந்த சோழ மன்னர்களால் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இன்று, இக்கோவில் தமிழக மக்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. சுந்தரர், அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகிய மகா புருஷர்கள் இக்கோவிலை வாழ்த்தி பாடி இருக்கிறார்கள்.
கீழ்பெரும்பள்ளத்தில் இருக்கும் இக்கோவிலையும், தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஷ்வரர் கோவிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை இருப்பதாக பரவலான நம்பிக்கை இங்கு நிலவுகிறது. எனினும், அடிக்கடி ஆய்வு செய்த பிறகும் இங்கு அப்படி எந்த ஒரு சுரங்கப்பாதையும் கண்டுபிடிக்கப்படவில்லை.