கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பாறைப் பூங்காவுக்கு செல்லவேண்டும். இங்கு வரும் பயணிகள், ஏராளமாக பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண பூக்கள், பசுமையான காடுகளுக்கு இடையில் தெரியும் சூரிய அஸ்த்தமனக் காட்சி ஆகியவற்றில் மனதை பறிகொடுப்பது உறுதி. மேலும், பூங்காவின் எல்லையில் நீங்கள் பத்ரா அணையின் பிரம்மாண்டத்தை கண்டு ரசிக்கலாம்.