கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் இசட் முனைக்கு செல்லலாம். இந்தப் பகுதியை நடைபயணம் மூலம் அடைவது சிறப்பானது. அப்போது வழியெங்கும் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இசட் முனையை நெடுந்தூர நடைபயனத்துக்கு பின் நீங்கள் அடைந்த பிறகு அற்புதமான சூர்ய அஸ்த்தமனத்தின் எழில் மிகும் காட்சியை காணலாம். அதோடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் கிறங்கடிக்கும் ஷோலா புல்வெளியின் பேரழகை இசட் முனையிலிருந்து பார்க்கும் எவருமே அந்த காட்சியை அவ்வளவு விரைவில் மறந்து விட மாட்டார்கள்.