கெஸ்ரோலி கிராமத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சமான குன்றுக் கோட்டை 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை குன்றின் உச்சியில் அமைந்திருப்பதோடு இதை சூழ்ந்து காணப்படும் விவாசாய நிலங்கள் பச்சை பட்டுடுத்தியது போல் பேரழகே உருவாய் காட்சியளிப்பதை நாட்பூராவும் ரசித்துக் கொண்டிருக்கலாம்.
குன்றுக் கோட்டை யதுவன்ஷி ராஜபுதன வம்சத்தை சேர்ந்தவர்களால் 6 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த யதுவன்ஷி வம்சத்தார் கிருஷ்ண பகவானின் சந்ததிகளாக கருதப்படுகின்றனர். ராஜஸ்தானின் மற்ற கோட்டைகளை போலவே இதுவும் அரச பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவுமே எழுப்பப்பட்டிருக்கிறது.
குன்றுக் கோட்டை பல்வேறு சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியையும், எழுச்சியையும் கண்டுள்ளது. இந்தக் கோட்டை முகலாய மன்னர்களின் ஆட்சியிலும், அதன்பிறகு ஜட் அரசர்களின் ஆளுமையிலும் இருந்து வந்திருக்கிறது. இறுதியாக அல்வார் நகரம் கண்டறியப்பட்ட காலத்தில், 1775-ஆம் ஆண்டு இந்தக் கோட்டையை ராஜ்புட் பேரரசு கைப்பற்றிவிட்டது.
குன்றுக் கோட்டை தற்போது நீம்ராணா ஹெரிடேஜ் என்ற நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தக் கோட்டையை மறுசீரமைத்து, சிறிய மாற்றங்கள் செய்து ஒரு அழகிய பாரம்பரிய ஹோட்டலாக மாற்றியுள்ளது.
இந்த ஹோட்டல் அதன் சிறிய கோபுரங்களுக்காகவும், பாதுகாப்பு அரண்களுக்காகவும், தாழ்வாரங்களுக்காகவும் இந்தியாவின் மிகச் சிறந்த பாரம்பரிய ஹோட்டல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.