தயுள் மடாலயம் அல்லது கோம்பா, ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3900 மீட்டர் உயரத்தில், சதிங்க்ரி கிராமத்தில் அமைந்துள்ள இம்மடாலயம் கீலாங்கின் பழமையான மடாலயங்களின் ஒன்றாகும். காம் பகுதியின் டோக்பா லாமா, செர்சங் ரிஞ்சென் ஆகியோரால் 17-ஆம் நூற்றாண்டில் இம்மடாலயம் நிறுவப்பட்டது.
திபெத்திய மொழியில் தயுள் என்பது 'தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்' என்று பொருள், மேலும் குரு பத்மசாம்பவரின் 12 அடி உயர சிற்பமும் அதனோடு இணைந்த இரு உருவாக்கங்களான சிங்கமுகமும் வஜ்ரவாஹனமும் இங்கு அறியப்படுகிறது.
பௌத்தர்களின் முக்கிய நிகழ்வுகளில் தானாகவே சுழலும் புகழ்பெற்ற நூறு மில்லியன் மணிச்சக்கரம் இம்மடாலயத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. தயுளில் இருக்கும் லாமாக்களின்படி கடைசியாக 1986-ஆம் வருடம் அச்சக்கரம் தானாகவே சுழன்றது.