கஜுராஹோ ஆர்க்கியாலஜிகல் மியூசியம் முற்காலத்தில் ஜார்டைன் மியூசியம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1952ம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இது வந்த பிறகு ஆர்க்கியாலஜிகல் மியூசியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1910ம் ஆண்டில் ஜார்டைன் என்பவரால் இந்த தொல்லியல் அருங்காட்சியகம் துவங்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான இந்த அருங்காட்சியகத்தில் கஜுராஹோ வரலாற்றுத்தலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கட்டிட இடிபாடுகள் மற்றும் சிலைகள் சிற்பங்கள் போன்றவை இவற்றில் அடங்கும். இந்த தொல்லியல் அருங்காட்சியகம் மாதங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது.
அருங்காட்சியகத்தின் உள்ளே திறந்த வெளி காட்சிக்கூடத்தில் அரும்பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது அவற்றில் இயல்புக்கு பொருத்தமான சூழலில் ரசிக்க உதவுகிறது. தற்போது நாம் காணும் அருங்காட்சியக வளாகம் 1967ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஐந்து பெரிய காட்சிக்கூடங்கள் உள்ளன. பிரதான கூடத்தில் பிராம்மணிய, பௌத்த மற்றும் ஜைன பிரிவுகளுக்குரிய சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் 2000 த்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் அடங்கியுள்ளன.
அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலை ஒன்று இவற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர நான்கு தலைகளை உடைய விஷ்ணு சிலையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இந்த சிலை வைகுந்தா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கஜுராஹோ சுற்றுலாப்பயணத்தின்போது தவறவிடக்கூடாத ஒரு சிறப்பம்சம் இந்த தொல்லியல் அருங்காட்சியகமாகும்.