கண்டாய் கோயில் எனும் ஜைனக்கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் உள்ள கிழக்குத்தொகுதி கோயில்களில் அமைந்திருக்கிறது. கண்டாய் எனும் சொல் கோயில் மணியை குறிக்கிறது.
இந்த கோயிலில் வடிக்கப்பட்டுள்ள தூண்களில் மணிகளின் வடிவம் சித்தரிக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் வழங்கிவருகிறது. 950-1050ம் ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் மஹாவீரரின் தாயார் கண்ட 16 கனவுக்காட்சிகள் புடைப்புச்சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
கருடனின் மீது சவாரி செய்யும் பல கைகள் கொண்ட ஜைனக்கடவுள் உருவத்தையும் இங்கு பார்க்கலாம். ஜைன பக்தர்கள் மஹாவீரரை கடைசி தீர்த்தங்கரராக வணங்கி வருகின்றனர்.
எனவே ஜைன ஆன்மீக யாத்ரீகர்கள் மத்தியில் இந்த கோயில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. பர்ஷவநாதர் கோயிலைப்போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் அதை விட அளவில் இரு மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.இதர ஜைன கோயில்களும் இந்த கண்டாய் கோயிலைச்சுற்றி அமைந்திருக்கின்றன.