மாதங்கேஷ்வரர் கோயில் சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோயிலாகும். இது 8 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட் சிவலிங்கத்தை கொண்டுள்ளது. மஹாசிவராத்திரியின்போது இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.
வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக இந்த கோயிலில் உள்ள சிவலிங்கம் புகழ் பெற்றுள்ளது. மஞ்சள் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த சிவலிங்கம் தேய்த்து மெருகேற்றப்பட்டு வழவழப்பாக காட்சியளிக்கிறது.
இந்த மாதங்கேஷ்வரர் கோயில் கஜுராஹோ ஸ்தலத்தில் ஆரம்ப காலத்திலேயே உருவாக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்கள் மத்தியில் மிகப்புனிதமான கோயிலாகவும் இது அறியப்படுகிறது.
லட்சுமணா கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைப்பு அல்லது பாதுகாப்பு வேலி எதுவும் இல்லை. மற்ற கோயில்களோடு ஒப்பிடும்போது சாதாரண தோற்றத்தை கொண்டிருந்தாலும் இந்த கோயில் மிக பிரசித்தமானதாக அறியப்படுகிறது.