கஜுராஹோ நகரத்திலிருந்து 43 கி.மீ தூரத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் இந்த ராணேஹ் நீர்வீழ்ச்சிப்பகுதி அமைந்துள்ளது. கென் ஆற்றில் உள்ள ஒரு கம்பீரமான நீர்வீழ்ச்சி ஸ்தலம் இது.
இங்கு கென் ஆற்றில் 5 கி.மீ நீளமும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பாறை குடைவு பள்ளத்தாக்குப்பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் ஸ்படிகம் போன்ற கிரானைட் பாறைகள் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் மின்னுவது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த குடைவுப்பள்ளத்தாக்குப்பகுதியில் பல நீர்வீழ்ச்சிகள் உருவாகின்றன. இவற்றில் சில நீர்வீழ்ச்சிகள் வருடமுழுதும் வற்றாமலும் ஏனைய சிறிய நீர்வீழ்ச்சிகள் கோடைக்காலத்தில் வற்றியும் காணப்படுகின்றன.
பன்னா தேசிய பூங்காவை ஒட்டியே இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியின் பசுமையும் பாறைகளில் விழும் நீர்வீழ்ச்சிகளின் மினுமினுக்கும் விவரிக்க முடியா ரம்மியத்துடன் கண்களை கவர்கின்றன.
மிரட்டும் இயற்கை அழகோடு காட்சியளிக்கும் இந்த ராணேஹ் நீர்வீழ்ச்சியை தரிசித்துவிட்டு திரும்பும் பயணிகள் பிரமிப்பிலிருந்து மீள்வதற்கே சில நாட்களாகலாம்.