ஆஹிர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஆசா ஆஹிர் ஆசிகர் கோட்டையைக் கட்டினார். இதற்கு ஆசிகர் குய்லா என்றும் ஒரு பெயர் உண்டு.
எவராலும் கைப்பற்ற முடியாத பாதுகாப்பன கோட்டை, ஆசிகர் கோட்டை என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. முகலாயப் பேரரசர் அக்பர் கூட இந்தக் கோட்டையை கைப்பற்ற முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் கோட்டையின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதன் கட்டுமானச் நுணுக்கச் சிறப்பு போன்றவற்றால், கோட்டையை கைப்பற்ற முடியவில்லை என்கிறது வரலாறு. கந்த்வாவில் இருந்து சுமார் 69 கிமீ தொலைவில் இருக்கும் ஆசிகர் கோட்டை சத்புரா வரம்பில் அமைந்திருக்கிறது.
பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோட்டை, நர்மதா பள்ளத்தாக்கை இணைக்கிறது. மேலும், சத்புறா மலை வழியாக தபதி ஆறும் இங்கும் பாய்கிறது.
முகலாய கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஆசிகர் கோட்டை, பெர்ஷிய, இஸ்லாமிய, துருக்கிய மற்றும் இந்திய பாணிகள் கலந்து கட்டப்பட்ட ஒரு அற்புத கோட்டை. மாடி மாளிகைகள், தூண்கள் மற்றும் கல்லரைகளைக் கொண்டு ஆசிகர் கோட்டை பிரம்மிப்பாக காட்சியளிக்கிறது.